states

img

ஜார்க்கண்டில் மின்னல் தாக்குதலுக்கு 8 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சனிக்கிழமை முதல் கடந்த 2 நாட்களாக கனமழை புரட்டியெடுத்து வருகிறது. தலைநகர் ராஞ்சி உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மழைநீரில் மிதக்கும் நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் இடி மற்றும் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் மழை நேரத்தில் வெட்டவெளிகளிலும், மரங்களின் அடியிலும் நிற்க வேண்டாம் எனவும், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் வசிப்போர் கவனமாக இருக்குமாறும் ஜார்க்கண்ட் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.